ரூ.1000 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் கூட்டம்

Viduthalai
2 Min Read

அரசியல்

சென்னை, நவ. 4-  சட்டப்பேரவையில் 2023-2024ஆம் ஆண்டு அறிவித்த திட் டமான ரூ.1000 கோடி மதிப்பீட்டில் “வடசென்னை வளர்ச்சித் திட்டம்” குறித்து சம்மந்தப்பட்ட துறை அரசு செயலாளர்கள் மற்றும் துறை உயர் அலு வலர்களுடன் ஆலோசனைக் கூட்டம், அறநிலையத் துறை அமைச்சரும் மற்றும் சிஎம்டிஏ தலைவருமான பி.கே.சேகர் பாபு தலைமையில், தலைமைச் செயல கத்தில் நேற்று (3.11.2023) நடைபெற்றது. 

இதுகுறித்து அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியதாவது:

வடசென்னை பகுதிகளில் கழிவு நீர் அடைப்பு, குடிநீரில் கழிவுநீர் கலப்பது போன்றவற்றை சீரான முறையில் மேம்படுத்துவதும், நல்ல உட்கட்ட மைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி, பூங்காக்கள் பராமரிப்பு, உடற்பயிற்சி கூடங்கள் பராமரிப்பு குறித்து ஆலோ சிக்கப்பட்டது.

மேலும், மயான பூமிகள் பராமரிப்பு, பள்ளிகள் கட்டமைப்பு மேம்பாடு, கல்லூரிகளில் கட்டமைப்பு மேம்பாடு, தடையில்லா மின்சாரம், மழைநீர் கால் வாய் பணிகள், புறநகர் மருத்துவமனை களை தரம் உயர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அதேபோல் காசிமேடு மற்றும் திரு வொற்றியூர் மீனவர் பகுதியில் வாழ் கின்ற மக்களுடைய வாழ்வாதாரம் மீன்பிடி தொழிலைச் சார்ந்த அவர்க ளுக்கு தேவையான அடிப்படை வசதி களை உருவாக்குதல் போன்றவை குறித் தும், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மகப்பேறு மருத்துவமனை அமைப்பது, போதை பழக்கத்தில் இருந்து மீள்வதற் கான மறுவாழ்வு மய்யம் அமைத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத் துவமனை உருவாக்குதல், டயாலிசிஸ் சென்டர் அமைத்தல் போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றார்.

இக்கூட்டத்தில் கால்நடை பரா மரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை செயலாளர் அமுதா, நகராட்சி நிர்வா கம் (ம) குடிநீர் வழங்கல் துறை செய லாளர் கார்த்திகேயன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித்துறை செய லாளர் சமயமூர்த்தி, சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செய லர் அன்சூல் மிஸ்ரா, பெருநகர சென்னை காவல் கூடுதல் ஆணையர்கள் (போக்குவரத்து) சுதாகர், (வடக்கு) ஆஸ்ரா கர்க் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *