ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை மாநில அரசே கொண்டு வரலாம் என்று அன்றே சொன்னார் கழகத் தலைவர் ஆசிரியர்; இன்று ஒன்றிய அமைச்சர் ஒப்புதல்!

1 Min Read

11.3.2023 அன்று ஆசிரியர் கி.வீரமணி  அவர்களின்  அறிக்கை

‘‘ஏழாவது அட்டவணையில் உள்ள மாநில அரசின் அதிகாரங்கள் – (சட்டம் இயற்ற) என்ற பிரிவில், 34 ஆவது தலைப்பாக, Betting and Gambling  என்று உள்ளது கூடத் தெரியாமலா தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு அந்த அதிகாரம் கிடையாது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி கூறுகிறார்! 

இது தவறு, மாநில அரசுக்கு அந்த அதிகாரம் உண்டு” என்று ஆசிரியர் கி.வீரமணி  அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் (11.3.2023).

21.3.2023 அன்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் இப்பொழுது அதையேதான் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தி.மு.க. உறுப்பினர் 

எஸ்.ஆர்.பார்த்திபன் ஆன்-லைன் சூதாட்டத் தடை சட்டம் குறித்து எழுப்பிய கேள்விக்கு, 

ஒன்றிய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் ‘‘ஆன்லைன் சூதாட்டங்களை தங்களது வரம்பிற்குள் கொண்டு வர தேவையான சட்டங்கள் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது” என்று ஒன்றிய அமைச்சர் பதில் அளித்தார்.

அன்று ஆசிரியர் சொன்னார்; இன்று ஒன்றிய அமைச்சர் சொல்கிறார் – வழிமொழிகிறார்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *