வல்லம், மார்ச் 24- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல் கலைக்கழகம்) உலக சமூகப்பணி நாளன்று தஞ்சையில் உ ள்ள ஓசானம் முதியோர் இல்லத்தில் பெரியார் மணிய்மமை நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் சமூகப்பணித் துறை மாணவர்கள் சார்பாக “கூட்டு சமூக நடவடிக்கை மூலம் பன்முகத்தன்மைகு மதிப்பதிளித் தல் “” என்னும் தலைப்பில் நிகழ்ச்சி நடத்தினர்.
சமூகப்பணித்துறையின் தலைவர் முனைவர் பரமேஸ்வரன் தலைமையுரை யாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினரான, தஞ்சை மாவட்ட சமூக நல அலுவலக “One stop Centre”மூத்த ஆலோசகர் எ.திவ்யா சிறப்புரையாற்றினார். “One stop Centre” ன் பெண்களுக்கான உதவி எண் 181 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி முதியோர்களுக்கான சட்டங்கள் குறித்து அவர் விளக் கினார். சமூகப்பணித்துறை மாண வர்கள் நன்றியுரை வழங்கினர்.
சமூகப்பணித்துறை மாணவர் கள் முதியோர்களுக்கு விளை யாட்டு போட்டிகள் நடத்தி பரிசு கள் வழங்கினர். சமூகப்பணித்துறை மாணவர்கள் சார்பாக கலை நிகழ்ச்சிகள் நடத்தி முதியோர் களை மகிழ்வித்தனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.