திங்கள்சந்தை, மார்ச் 24- குமரிமாவட்ட திராவிடர்கழகம் சார்பாக திங்கள் சந்தையில் பேருந்து நிலையம் முன்பாக தந்தை பெரியாருடைய பகுத்தறிவு கருத்துக்கள் அடங்கிய துண்டறிக்கைகளை பொதுமக்க ளிடம் வழங்கி பகுத்தறிவு பரப் புரை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் உ. சிவதாணு பரப்பு ரையை தொடங்கிவைத்தார் . திமுக குருந்தன்கோடு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நெய்யூர் தா.ஜெபராஜ் முன்னிலை வகித்தார்* பெரியார் பிஞ்சுகள் ஜெ .ஜெபிஷா, ஜெ. தீபிகா மற்றும் தோழர்கள் இஸ்மாயில் உள்பட பலரும் கலந்து கொண்டனர். தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரு டைய கருத்துக்கள் அடங்கிய துண்டறிக்கைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி படித்தனர்.