வேலைவாய்ப்பு விண்ணப்பப் பதிவு தொடக்கம்!

1 Min Read

சென்னை, மார்ச் 24- தேசிய தேர்வு முகமை ஆனது இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் எனப்படும் Junior Assistant-cum-Typist (JAT)  பணியிடங்களை நிரப்புவதற்கான குறுகிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர் கள் இப்பதவிக்கு 22.03.2023 முதல் 20.04.2023 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Junior Assistant-cum-Typist (JAT)  பணியிடங்களுக்கான ஆன்லைன் தேதி விவரங்கள் மட்டுமே தற்போது வெளியாகி உள்ளது. தேர்வுத் திட்டம், தேர்வு மையங்கள், தேர்வு நேரங்கள், தேர்வுக் கட்டணம், விண்ணப்பிப்பதற்கான நடைமுறை முதலியன பற்றிய தகவல்கள் NTA இன் இணையதளத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள வர்கள் முழு விவரங்கள் வரும் வரை காத்திருந்து விண் ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பப் படிவத்தை ஆன்லைன் மூலம் 22 மார்ச் 2023 (காலை 10:00 மணி முதல்) 20 ஏப்ரல் 2023 (23:50 மணி வரை) சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தின் விவரங்களில் திருத்தம் செய்ய வேண்டும் எனில் அதை 21 ஏப்ரல் 2023 முதல் 22 ஏப்ரல் 2023 வரை செய்து கொள்ளலாம். மேலும் தேர்வு தேதி பற்றிய விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் NTA அறிவித்துள்ளது.

கேரளாவில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: அரசு அறிவிப்பு

அரசியல்

திருவனந்தபுரம், மார்ச் 24- நாடு முழுவதும் மீண்டும் புதியவகை கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தென் மாநிலங்களில் தொற்றுப் பரவாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, 

இந்த நிலையில் கேரள மாநில அரசு முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவித்துள்ளது.கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *