டில்லியில் பிரதமர் மோடிக்கு எதிராக சுவரொட்டிகள் காவல்துறையினர் வழக்கு

1 Min Read

அரசியல்

புதுடில்லி, மார்ச் 24- தலைநகர் டில்லியின் பல பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. 

‘மோடியை அகற்றுங்கள், நாட்டை காத்திடுங்கள்’ என்ற வாசகங்கள் அடங்கிய அந்த சுவரொட்டிகளால் டில்லியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த சுவரொட் டிகளை காவல்துறையினர் அகற்றி வருகின்றனர். அந்த வகையில் சுவர்களிலும், மின் கம்பங்களிலும் ஒட்டப் பட்டிருந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட சுவரொட்டிகளை காவல்துறையினர் கிழித்து எறிந்தனர். 

அதேநேரம் ஆம் ஆத்மி அலுவலகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான சுவரொட்டிகளுடன் வந்த வாகனம் ஒன்றை, போஸ்டர்களுடன் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட விவ காரத்தில் நகரின் பல காவல் நிலையங்களில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *