2022-2023இல் அதிக நன்கொடை அளித்தவர்கள்

1 Min Read

புதுடில்லி, நவ.4  ஹூருன் அமைப்பு, 2022-2023 நிதி ஆண்டில் அதிக நன் கொடை வழங்கிய இந்தியர்களின் பட் டியலை வெளியிட்டுள்ளது. 

இந்தப் பட்டியலில் எச்சிஎல் இணை நிறுவனர் ஷிவ் நாடார் முதல் இடத்தில் உள்ளார். ஷிவ் நாடார் 2022-2023 நிதி ஆண்டில் ரூ.2,042 கோடி நன்கொடை வழங்கி யுள்ளார். சராசரியாக நாளொன்றுக்கு ரூ.5.6 கோடி அவர் நன்கொடையாக வழங் கியுள்ளார். 

2-ஆவது இடத்தில் விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி உள்ளார். அவர் கடந்த நிதி ஆண்டில் ரூ.1,770 கோடி நன்கொடை வழங்கி யுள்ளார். மூன்றாம் இடத்தில் முகேஷ் அம் பானி (ரூ.376 கோடி), நான்காம் இடத்தில் குமார மங்களம் பிர்லா (ரூ.287 கோடி), அய்ந்தாவது இடத் தில் கவுதம் அதானி (ரூ.285 கோடி) உள்ளனர். பஜாஜ் குடும்பம் ரூ.264 கோடி நன்கொடை வழங்கி இந்தப் பட்டியலில் 

6-ஆவது இடத்தில் உள்ளது.  நந்தன் நிலகேணி, நிதின் காமத் உள்ளிட்டோர் இந்தப் பட்டிய லில் இடம் பெற்றுள்ளனர். வேதாந்தா  குழு மத்தின் அனில் அகர்வால் (ரூ.241 கோடி) 

7-ஆவது இடத்திலும், சைரஸ் பூனாவாலா மற்றும் ஆதர் பூனாவாலா ஆகியோர் (ரூ.179 கோடி) 8-ஆவது இடத்திலும் உள்ளனர். இந்தப் பட்டியலில் ரோஹினி நிலகேணி, அனுஅகா, லீனா காந்திதிவாரி உட்பட 7 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். ரோஹினி நிலகேணி ரூ.170 கோடி நன் கொடை வழங்கியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *