புதுவையில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாள் நிகழ்ச்சி பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரை!

Viduthalai
1 Min Read

அரசியல்

புதுச்சேரி, மார்ச் 26- புதுச்சேரி சுதேசி மில் அருகில் 23.3.2023 அன்று மாலை 6 மணி அளவில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் ஆகியோரின் நினைவு நாள் நிகழ்ச்சியும் ஒன்றிய அரசின் முகத்திரை கிழிப்பு விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. 

முன்னதாக மாலை 5 மணி அளவில் சுப்பையா சிலையிலிருந்து பேரணி நடைபெற்றது. கோவன் கலைக்குழுவின் கலை நிகழ்ச்சி கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக அமைந் தது. நிகழ்வில் கழகப் பொதுச் செய லாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மக்கள் அதி காரம் அமைப்பின் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ராஜு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். 

புதுச்சேரி மாநில தலைவர் சிவ வீரமணி, விடுதலை வாசகர் வட்ட தலைவர் தமிழ்ச் செல்வன், கழக பொறுப்பாளர் சிவரசன், வழக்குரைஞர் புனிதன், கடலூர் மாவட்ட மக்கள் அதிகாரம் செயலாளர் பாலு மற்றும் தோழர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். 

“நான் ஏன் நாத்திகன்” எனும் பகத்சிங்கின் நூல் பற்றியும் பகத்சிங்கின் பகுத்தறிவு பான்மை பற்றியும் இங்கிலாந்து வல்லாண்மை எதிர்ப்பு குறித்தும் இந்தியாவின் விடுதலைக் கான மூவரின் ஈகம் பற்றியும் கூட்டத்தில் விளக்கிப் பேசப்பட்டது 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *