புதுவையில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாள் நிகழ்ச்சி பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரை!

1 Min Read

அரசியல்

புதுச்சேரி, மார்ச் 26- புதுச்சேரி சுதேசி மில் அருகில் 23.3.2023 அன்று மாலை 6 மணி அளவில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் ஆகியோரின் நினைவு நாள் நிகழ்ச்சியும் ஒன்றிய அரசின் முகத்திரை கிழிப்பு விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. 

முன்னதாக மாலை 5 மணி அளவில் சுப்பையா சிலையிலிருந்து பேரணி நடைபெற்றது. கோவன் கலைக்குழுவின் கலை நிகழ்ச்சி கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக அமைந் தது. நிகழ்வில் கழகப் பொதுச் செய லாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மக்கள் அதி காரம் அமைப்பின் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ராஜு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். 

புதுச்சேரி மாநில தலைவர் சிவ வீரமணி, விடுதலை வாசகர் வட்ட தலைவர் தமிழ்ச் செல்வன், கழக பொறுப்பாளர் சிவரசன், வழக்குரைஞர் புனிதன், கடலூர் மாவட்ட மக்கள் அதிகாரம் செயலாளர் பாலு மற்றும் தோழர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். 

“நான் ஏன் நாத்திகன்” எனும் பகத்சிங்கின் நூல் பற்றியும் பகத்சிங்கின் பகுத்தறிவு பான்மை பற்றியும் இங்கிலாந்து வல்லாண்மை எதிர்ப்பு குறித்தும் இந்தியாவின் விடுதலைக் கான மூவரின் ஈகம் பற்றியும் கூட்டத்தில் விளக்கிப் பேசப்பட்டது 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *