ரிசிவந்தியம் ஒன்றிய திராவிட மாணவர் கழக கலந்துரையாடல்

1 Min Read

அரசியல்

ரிசிவந்தியம், மார்ச் 26- கல்லக்குறிச்சி மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் ரிசிவந்தியம் ஒன்றிய அளவிலான திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் 23.3.2023 அன்று வியாழன் காலை 11 மணிக்கு, அரியலூர் கம்மங்காட்டு திட லில் நடைபெற்றது. 

கலந்துரையாடல் கூட்டத் திற்கு கல்லக்குறிச்சி மாவட்ட கழக துணைத் தலைவர் திரா விட சசி தலைமை தாங்கினார். விழுப்புரம் மண்டல திராவிட மாணவர் கழக தலைவர் எஸ். இ. ஆர். திராவிட புகழ், கல்லகக் குறிச்சி மாவட்ட கழகத் தலைவர் ம.சுப்பராயன், அரி யலூர் கிளைக் கழக தலைவர் வே.கோதண்டபாணி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். 

மாணவர் கழக அரியலூர் கிளைக் கழக அமைப்பாளர் கோகுல் வரவேற்புரை ஆற் றினார். இக்கூட்டத்தில் அ.ராமச்சந்திரன், மோனிஷா, 

ஏ விக்னேஷ் குமார், வி. சந்துரு, எஸ். மனோஜ் குமார், சத்யா கோதண்டபாணி, கே ஹரி ஹரன், சபீதா, ஏ மகேஸ்வரி உள்ளிட்ட 27 தோழர் தோழி யர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் பொதுவாக தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு, பெண் உரிமை பற்றி கலந்துரையாடப்பட்டது. இறுதியில் சங்கராபுரம் நகர திராவிட மாணவர் கழக அமைப்பாளர் மா ஏழுமலை நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *