ராகுல் காந்தி தகுதி நீக்கம் : சரத்குமார் கண்டனம்

1 Min Read

சென்னை மார்ச் 26  சமக தலைவர் சரத் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:   பிரச்சாரத் தில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, மோடி என்ற பெயர் கொண்டவர்களை பற்றி தவறுதலாக பேசியதாக தெரிவித்து, குஜராத்தை சேர்ந்த பாஜ சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்ததில், சூரத் நீதிமன்றம் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. தண்ட னையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் பிணை வழங்கி தண்ட னையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருந்தது.

நாடாளுமன்றத்தில், இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு கூடி, விசாரணை நடத்தி 30 நாட்கள் கால அவகாசம் கொடுத்திருக்கலாம். ஆனால், கால அவகாசம் கொடுக்காமல் உடனடியாக தகுதி நீக்கம் செய்தது ஏன் என்று புரியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கு, நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டு, 30 நாட்கள் அவகாசம் வழங்கி விளக்கம் கோரும் போது, நாடாளுமன்றத்தில் உரிய கால அவ காசம் வழங்காமல், உடனடியாக தகுதிநீக்கம் செய்தது, அவர்களின் ஜனநாயக கடமையை ஆற்றுவதை தடை செய்வதாகவே எடுத்துக் கொள்ளப்படும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *