சட்டமன்றத்தில் கருப்புச் சட்டையில் காங்கிரசார்
சென்னை,மார்ச்27- காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி நீக்கத்தை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (27.3.2023) கருப்பு உடையில் தமிழ் நாடு சட்டமன்றத்திற்கு வந்தனர். ராகுலுக்கு ஆதவராக இருப்பேன் என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகளுடன் கங்கிராஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை வளாகத்தில் முழக்கங்களை எழுப்பினர்.
பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியது தொடர்பாக, குஜராத் நீதிமன்றம் கடந்த 24ஆம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதை தொடர்ந்து, ராகுல் காந்தியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் பதவி தகுதி நீக்கம் என அறிவிக்கப்பட்டு அவர் பதவி பறிக்கப் பட்டது. அவரின் பதவி பறிப்புக்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.