பேருந்துகளில் குழந்தைகளுக்கு இலவசப் பயணம் விவரத்தை பதிவு செய்ய உத்தரவு

1 Min Read

அரசியல்

சென்னை,மார்ச் 27- விரைவுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளின் விவரத்தைப் பதிவு செய்யுமாறு பேருந்து நடத்துநர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இளங்கோவன் அனுப்பிய சுற்றறிக்கை:

கடந்த ஆண்டு மே 5ஆம் தேதி, 3 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் கட்டணமில்லாமல் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் மேற்கொள் ளலாம் என்று போக்குவரத்து அமைச்சர் பேரவையில் தெரிவித்தார். இதையடுத்து, அன்று முதல் விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், 3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் இலவசமாகப் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் விரைவுப் பேருந்து களில் பயணித்த குழந்தைகளின் விவரத்தை அரசுக்குத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, வரும் காலங்களில் விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், இலவசமாகப் பயணிக்கும் 3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளின் விவரத்தை அனைத்து நடத்துநர்களும் போக்குவரத்து அறிக்கையில் பதிவு செய்ய வேண்டும். பயணிகளின் விவரத்தை தலைமையகத்துக்குத் தெரிவிக்கும்போது, குழந்தைகள் பயணம் தொடர்பான விவரத்தையும் கிளை மேலாளர்கள் தெரிவிக்க வேண்டும். 

-இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *