‘உண்மை, பொய்களை அறிந்துகொள்ளும் பகுத்தறிவை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்’ – உதயநிதி ஸ்டாலின்

1 Min Read

அரசியல்

சென்னை, மார்ச் 27- உண்மை செய்தியை விட பொய் செய்தி வேகமாக பரவுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை பெருநகர காவல் துறை சார்பில் நடத்தப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை குறித்த ஆவண திரைப்பட போட்டி யில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் நடை பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட் டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.

இதன் பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்றைய காலத்தில் உண்மை செய்தியை விட பொய் செய்தி வேகமாக பரவுவதா கவும், “வாட்ஸ் ஆப்” மூலம் வரும் தகவல்களில் உண்மை செய்தி எது, பொது செய்தி எது என்பதை பிரித்து அறிந்துகொள்ளும் பகுத்தறிவை மாண வர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *