பெண் சிறைக் கைதிகளுக்கு ‘வீடியோ கால்’ வசதி

Viduthalai
3 Min Read

அரசியல்

சென்னை, மார்ச் 27- மன அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழ் நாடு சிறையில் உள்ள பெண்கை திகள், அவர்களது குடும்பத்தினருடன் ‘வீடியோ கால்’ மூலம் பேசும் வசதியை தமிழ்நாடு சிறைத் துறை அடுத்த வாரம் அறிமுகம் செய் கிறது. இதன் மூலம், வெளிநாட்டுப் பெண் கைதிகளும் பலனடைய உள்ளனர். சிறைக் கைதிகளை சீர்படுத்தி, அவர்கள் விடுதலையான பின்னர், மீண்டும் சமுதாயத்துடன் இணைந்து மறுவாழ்வைத் தொடங்கவும், மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடாத வகையில் அவர்களை மாற்றுவதும் சிறைத் துறையின் குறிக்கோளாகும்.

தமிழ்நாட்டில் 9 மத்திய சிறைகள், பெண்களுக்கான தனிச் சிறைகள் 3, மாவட்ட சிறைகள் 4, ஆண் களுக்கான கிளைச் சிறைகள் 100 உள்பட 130-க்கும் மேற்பட்ட சிறைகள் உள்ளன. 2019ஆம் ஆண்டு தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி, தமிழ் நாட்டு சிறைகளில் சுமார் 14 ஆயிரம் பேர் அடைக்கப்பட்டுள் ளனர். இவர்களில் 600 பேர் பெண் கைதிகள், 112 பேர் வெளிநாட்டுக் கைதிகள். இதேபோல, தூக்குத் தண்டனைக் கைதிகள் 6 பேரும், ஆயுள் கைதிகள் 2 ஆயி ரத்து 495 பேரும் சிறையில் உள்ள னர். சிறைக் கைதிகளை நல்வழிப் படுத்தவும், அவர்கள் தண்டனைக் காலம் முடிந்து வெளியே வரும் போது, சொந்தக் காலில் நிற்க ஏதுவாக கைத்தொழில் கற்றுக் கொடுக்கப்படுவதாகவும் தமிழ் நாட்டு சிறைத் துறை காவல் துறை தலைமை இயக்குநர் அம்ரேஸ் புஜாரி தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளைக் காண, அவர்களது குடும்பத்தினர் அவ்வப்போது சிறைகளுக்கு வருவார்கள். ஆனால், பெண் கைதிகளைக் காண, கணவர், குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட் டோர் பெரும்பாலும் வருவது இல்லை. கவுரவம், அவமானம் என இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இதனால், சிறை யில் உள்ள பெண்கள் அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். இவற்றை போக்க யோகா கற்றுக் கொடுக்கப்படுகிறது. புத்தகம் படிக்க வைக்கிறோம். மேலும், அவர்களது திறனை வளர்க்க பல்வேறு பயிற்சிகள் கொடுக்கப்படு கின்றன. அடுத்தகட்டமாக, சிறை யில் உள்ள பெண் கைதிகள், தங்களது குடும்பத்தினருடன் நேரடியாக அலைபேசியில் பேசும் வகையில், வீடியோ கால் (காணொ லிப் பேச்சு) வசதி செய்யப்பட உள்ளது.

அடுத்த வாரம் சோதனை ஓட்டமாக இது தொடங்கப்பட உள்ளது.வீடியோ காலில் பேசும் பெண் கைதிகள், தங்கள் குடும்பத்தி னருடன் மட்டுமே பேசலாம். இதைக் கண்காணிக்க சிறை அதி காரிகள் உடன் இருப்பார்கள். இதற்காக தனி அறை ஒன்றும் சிறை வளாகத்திற்குள் ஒதுக்கப் படும். மாதம் எத்தனை முறை பேசலாம், எவ்வளவு நேரம் பேச லாம், இதற்கு எவ்வளவு கட்டண மாக வசூலிக்கலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். சிறையில் உள்ள கைதிகளைநேரில் பார்க்க வர வேண்டுமென்றால் பணம், நேரம் செலவாகும். வெளி நாட்டுக் கைதிகளைப் பார்க்க அவர்களது குடும்பத்தினர் தமிழ் நாடு வருவதால், செலவு, நேரம் மேலும் அதிகரிக்கும். ஆனால், வீடியோ காலில் பேசினால் நேரம், பணம், அலைச்சல் எதுவும் இல்லை. இதற்காகவே வீடியோ கால் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. சிறையில் உள்ள பெண் கைதிகளின் மன அழுத்தத்தைப் போக்கி, அவர்களை நல்ல குடிமக் களாக வெளியே அனுப்ப வேண் டும் என்பதுதான் எங்கள் நோக்கம். இதற்காகவே இதுபோன்ற நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்படு கின்றன. இவ்வாறு காவல்துறை தலைமை இயக்குநர் அம்ரேஸ் புஜாரி தெரிவித்தார்.

நாட்டிலேயே முதல் முறையாக சிறையில் உள்ள பெண் கைதிகள், தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசும் வசதியை மகாராட்டிரா அரசு அறிமுகம் செய்திருந்த நிலையில், இரண்டா வதாக தமிழ்நாட்டிலும் இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *