திருச்சி மார்ச் 27 திருச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக் கணக்கில் பணத்தை இழந்து கடனாளியானதால் ஒன்றிய அரசு ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண் டார்.
திருச்சி நவல்பட்டு பகுதியில் உள்ள ஒன்றிய அரசுக்குச் சொந் தமான துப்பாக்கித் தொழிற் சாலையின் மருத்துவமனையில், மருத்துவ உதவியாளராக பணி புரிந்தவர் இசக்கிமுத்து மகன் ரவி சங்கர்(37). தூத்துக்குடியைச் சேர்ந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக மனைவி, மற்றும் மகனுடன் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பணியாளர்கள் குடியிருப்பில் வசித்து வந்தார்.மனைவியும், மகனும் ஊருக்குச் சென்றிருந்த நிலையில், 25.3.2023 அன்று காலை நீண்ட நேரம் ஆகியும் ரவி சங்கர் வீட்டை விட்டு வெளியே வராததால், அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ரவி சங்கர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.இதுகுறித்த புகாரின்பேரில் நவல்பட்டு காவல் துறையினர் அங்கு சென்று ரவிசங்கரின் உடலை கைப் பற்றி உடற்கூராய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, ‘‘ஆன்லைன் சூதாட் டத் தில் ஆர்வம் கொண்ட ரவி சங்கர், அதில் விளையாடி பல லட்சம் ரூபாயை இழந்துள்ளார். இதற்காக அவர், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமலும், ஆன் லைன் சூதாட்டங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமலும் தவித்த அவர், 24.3.2023 அன்று இரவு அதிகளவில் தூக்கமாத் திரைகளை சாப் பிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், இவர் கடன் தொல்லையால் ஏற்கெனவே ஒருமுறை தற்கொலைக்கு முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது’’ என்றனர்.
மேலும் ஒரு தற்கொலை
இந்த நிலையில், திருச்சியில் ஆன்லைன் சூதாட்ட விளை யாட்டால் மேலும் ஒருவர் தற் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அஞ்சல்காரன்பட் டியை சேர்ந்த வில்சன் (26) என்பவர் தூக்குப் போட்டு தற் கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆன்லைன் ரம்மியால் சுமார் ரூ.4 லட்சத்தை இழந்ததால் கூலிதொழிலாளி வில்சன் தற் கொலை செய்து கொண் டாதாக காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. பின்னர் காவல் துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடற் கூராய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த நிகழ்வு தொடர் பாக வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே திருச்சியில் லூடோ விளையாட்டால் ஒருவர் இறந்த நிலையில் ஆன்லைன் ரம்மியால் மேலும் இருவர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.