ஒவ்வொரு கழகத் தோழரும் ‘விடுதலை’ ஏட்டை கட்டாயம் வாங்க வேண்டும் – காரைக்குடி மாவட்ட கழக தீர்மானம்!

2 Min Read

திராவிடர் கழகம்

காரைக்குடி, நவ 4– காரைக்குடி மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் 

ம.கு. வைகறை தலைமையில், தலை மைக் கழக அமைப்பாளர் கா.மா.சிகாமணி, மாவட்ட காப் பாளர் சாமி திராவிடமணி, முன் னிலையில் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட 

சி.செல்வமணி தனது வரவேற் புரையில் இயக்கத்தில் உறுப்பினர் களை அதிகமாக முனைப்போடு சேர்ப்பது எனவும், மாவட்டம் முழுக்க ஊர்தியில் பரப்புரை செய்ய வேண்டும் எனவும் தனது வேண்டுகோளை தெரிவித்தார். 

சிறப்புரையாற்றிய தலைமைக் கழக அமைப்பாளர் கா.மா. சிகா மணி தனது உரையில், நவம்பர் 5 அன்று திருப்புவனத்தில் நடை பெறக்கூடிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் மனுதர்ம யோஜனாவா? 

குலக்கல்வி எதிர்ப்பு வரவேற்பு பொதுக்கூட்டத்தில் பெருந் திர ளாக பங்கேற்க வேண்டும் எனவும், விடுதலை சந்தாவை புதுப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 

மாவட்டத் தலைவராக பொறுப் பேற்றுக் கொண்ட ம.கு. வைகறை தனது உரையில் விடுதலை இதழை அனைத்து தோழர்களும் கட்டா யம் வாங்க வேண்டியதன் அவசி யத்தை எடுத்துரைத்தார். 

ஒவ்வொரு தோழரும் தன்னை ஒரு பரப்புரை ஆயுதமாக கொள்ள வேண்டும் என்ற எனவும், நாள் தோறும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக பெரியார் நாள்காட்டியை வைக்க வேண்டும் எனவும், அமைப்பு  பணிகளின் வளர்ச்சியில் அனைத்து தோழர்களும் பங் கெடுக்க வேண்டும் எனவும் வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

.மாவட்டத் துணைத் தலைவர் கொ.மணிவண்ணன் நன்றியுரை கூறினார்.

நிகழ்வில் தி.தொ.க செயலாளர் சொ.சேகர், நகர கழக அமைப் பாளர் ஆ.பால்கி, அ.பிரவீன் முத்து வேல் ஆகியோர் பங்கேற்றனர்.

தீர்மானங்கள்:

விடுதலை சந்தாவை புதுப்பிக்க வேண்டியது மிக அவசியமானது எனவும், ஒவ்வொரு கழகத் தோழரும் விடுதலை விடுதலை கட்டாயம் வாங்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

எதிர்வரும் டிசம்பர் 2 தமிழர் தலைவர் அய்யாவின் 91ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவ தெனவும் தீர்மானிக்கப்படுகிறது

அமைப்புப் பணிகளின் வளர்ச் சியில் பொறுப்பாளர்கள் அனை வரும் பங்கெடுக்க வேண்டு

மெனவும் தீர்மானிக்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *