‘கருநாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு மீண்டும் 4% இடஒதுக்கீடு’ காங்கிரசு கட்சித் தலைவர் டி.கே.சிவகுமார்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெங்களூரு, மார்ச் 28 கருநாடக மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின் (ஓபிசி) 2பி என்ற துணைப் பிரிவில் இருந்த இஸ்லாமியர்களுக்கான 

4 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கான பழைய இடஒதுக்கீடு நடைமுறை மீண்டும் கொண்டுவரப்படும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

கடந்த 24.3.2023 அன்று நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், அரசு வேலைவாய்ப்பு, கல்வி நிறுவனங்கள் சேர்க்கையில், பொருளா தார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கான (இடபிள்யூஎஸ்) 10 சதவீத இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களைச் சேர்க்கவும், ஒக்கலிகர், லிங்காயத்து சமூகத்தினருக் கான இடஒதுக்கீடை தனித்தனியே 2 சதவீ தம் அதிகரிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், அரசின் இந்த முடிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். 

இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர்அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

இஸ்லாமியர்களின் 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து, பெரும்பான்மை சமூகத்துக்கு வழங்கு வதை நாங்கள் விரும்பவில்லை. இடஒதுக்கீட்டை சொத்து போன்று பங்கிட முடியும் என மாநில அரசு கருதுகிறது. இது சொத்து இல்லை. அவர்களின் உரிமை. அடுத்த 45 நாள்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். நாங்கள் இந்த முடிவை ரத்து செய்வோம். காங்கிரஸ் அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படும்.

ஓபிசி பட்டியலில் இருந்து இஸ்லாமியர்களை நீக்கியதற்கு எந்த வொரு அடிப்படை காரணமும் இல்லை. நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியைச் சந்திக்க உள்ள நிலை யில், உணர்வுபூர்வமான பிரச்சினைகளை அக்கட்சி எழுப்பியுள்ளது என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *