குடிமைப் பணிகளுக்கு ஆட்கள் நியமனம் – தேர்வு நடைமுறையை விரைந்து முடிக்க நாடாளுமன்ற குழு வலியுறுத்தல்

2 Min Read

புதுடில்லி, மார்ச் 29- குடிமைப் பணிக்கு தகுதியான நபர்களை தேர்ந் தெடுக்கும் நடைமு றைக்கு 15 மாதங்கள் ஆகிறது. இது நீண்ட நெடிய தேர்வு நடைமுறை யாக உள்ளது. இதனால், மாணவர்களின் பொன்னான காலம் வீணடிக்கப்படுகிறது. அத்துடன் குடிமைப் பணி தேர்வை எதிர் கொள்ளும் மாணவர்கள் மனதளவிலும், உடல் அளவிலும் சோர்வை சந்திக்கின்றனர். இதனால், அவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. 

இதனை கருத்தில் கொண்டு, சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணிக்கான தேர்வு, சுழற்சி நடைமுறைகளின் காலத்தை கணிசமாக குறைக்குமாறு ஒன்றிய அரசுப் பணியாளர் தேர் வாணையத்திடம் (யுபிஎஸ்சி) நாடாளு மன்றக் குழு வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து பணியாளர்கள், பொது மக்கள் குறைகள், சட்டம் மற்றும் நீதி தொடர்பான துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழு கூறியுள்ளதாவது: 

சிவில் சர்வீசஸ் பணிக ளுக் கான தேர்வில் பங் கேற் கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கான காரணங்களை கண்டறிய யுபிஎஸ்சி விரி வான முறையில் ஆய்வு நடத்த வேண்டும்இந்திய நிர்வாகப் பணி  (IAS), இந்திய வெளியுறவுப் பணி (IFS) மற்றும் இந்தியக் காவல் பணி (IPS)  உள்ளிட்ட அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்க, யுபிஎஸ்சி ஆண்டு தோறும் மூன்று நிலைக ளில் அதாவது முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்கா ணல் மூலம் தேர்வு நடத் துகிறது. யுபிஎஸ்சி வழங் கிய தரவுகளின்படி, சிவில் சர்வீசஸ் தேர்வுக் கான சராசரி நேரம் என்பது அறிவிப்பு வெளி யான நாளிலிருந்து இறுதி முடிவு அறிவிக்கப் படும் தேதி வரை கிட்டத் தட்ட 15 மாதங்கள் ஆகிறது. இது, தேர்வு எழுதிய மாணவர்களிடையே மனதளவில் அயற்சியை ஏற்படுத்துகிறது. தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதால் இடைப்பட்ட காலத்தில் மாணவர்கள் வேறு எந்த முயற்சிகளும் மேற் கொள்ள முடியாத நிலை உள்ளது.

தேர்வு முடிவு களை பொறுத்து அடுத்த கட்ட செயல்பாடுகளை மாணவர்கள் திட்டமி டுவதால் பல மாதங்கள் காத்திருக்கும் நிலை உள் ளது. எந்தவொரு ஆட் சேர்ப்புத் தேர்வின் கால அளவும் பொதுவாக ஆறு மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண் டும். இதனை கருத்தில் கொண்டு தரத்தில் சமர சம் செய்யாமல் ஆட் சேர்ப்பு சுழற்சியின் காலத்தை கணிசமாகக் குறைக்க யுபிஎஸ்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நாடாளுமன்றக்குழு தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *