பெரியார் மருந்தியல் கல்லூரியில் திருச்சி சுப்ரமணியபுரம் ஆரம்ப சுகாதார மய்யத்தின் சார்பில் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் கண்டறியும் மக்களைத்தேடி மருத்துவ முகாம் 28.03.2023 அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இதில் மக்களைத்தேடி மருத்துவத்தின் தன்னார் வலர்கள் ஜே. இராஜராஜேஸ்வரி, எஸ். ருக்மணி, ஆர். தேவி மற்றும் எஸ்.மகேஸ்வரி ஆகியோர் கல்லூரியின் பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டனர். பெரியார் நலவாழ்வு சங்கம் ஏற்பாடு செய்த இம்மருத்துவ முகாமில் முதற்கட்டமாக பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் 123 மாணவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டது குறிப்பிடத்தக்கது.
பெரியார் மருந்தியல் கல்லூரியில் மக்களைத்தேடி மருத்துவ முகாம்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books