தி.மு.க. ஆட்சியின் சாதனை! 86 சதவீத திட்டங்களுக்கு அரசாணை வெளியீடு – சட்டப் பேரவையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

1 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, மார்ச் 29- அதிமுக ஆட்சியில் விதி 110இன் கீழ் அறிவித்த அறிவிப்புகளில் 27 சதவீதம் மட்டுமே செயல்படுத்தப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் 86 சதவீத திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

 சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத் திற்கு பதிலுரை அளித்த அவர், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் விதி 110இன் கீழ் மட்டுமே 3 லட்சத்து 27 ஆயிரத்து 157 கோடி ரூபாய் மதிப்பிட்டில் 1704 அறிவிப்புகளை வெளியிட்டார்கள் எனவும் ஆனால் அதற்கு நிதி கூட ஒதுக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், 87 ஆயிரத்து 405 கோடி ரூபாய் மதிப்பிலான 27 சதவீத திட்டங்கள் மட்டும் தான் அதிமுக ஆட்சியில்  செயல்படுத்தப் பட்டுள்ளது எனவும் கூறினார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு ஆளுநர் உரை அறிவிப்புகள் 78, முதலமைச்சர் 161 அறிவிப் புகளை தனியாகவும், இதர அறிவிப்புகளாக 46 அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டதோடு, விதி 110இன் கீழ் 67 அறிவிப்பு களையும், மாவட்டங்களுக்கு ஆய் வுக்கு சென்ற போது 88 அறிவிப் புகளும், மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் 5 அறிவிப்புகள், நிதி நிலை அறிக்கையில் 338 அறிவிப்பு களையும், வேளாண் நிதி நிலை அறிக்கையில் 330 அறிவிப்புகள் என்று மொத்தம் 3 ஆயிரத்து 537 திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதில் 3038 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட் டுள் ளதாகவும், அதாவது 86 சதவீத திட்டங்கள் செயல்படுத்தி வருவ தாக தெரிவித்தார்.

இதில் விதி 110இன் கீழ் அறிவித்த அறிவிப்புகளில் 63 திட்டங் களுக்கு அரசாணை வெளியிடப் பட்டு 39 திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளாதவும், 24 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும் விவரித்தார் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *