ஏன் இந்த அச்சம்? ட்விட்டர் பக்கத்தில் ராகுல் கேள்வி

1 Min Read

புதுடில்லி, மார்ச் 29 காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பி உள்ளார். அதில், ‘‘அதானி குழுமத்துக்கு எல்அய்சி, எஸ்பிஅய் வங்கி பணம் வழங்கப்படுகிறது. பொது மக்களின் ஓய்வூதிய பணம் கூட அதானி குழுமத்துக்கு வழங் கப்பட்டு வருகிறது. மக்கள் ஒய் வூதிய பணத்தை ஏன் அதானிக்கு வழங்க வேண்டும்.

‘மோதானி’ தொடர்பு பற்றி ஹிண்டன்பர்க் அறிக்கை வெளி யான பிறகு கூட, இபிஎப்ஓ பணம் அதானிக்கு வழங்கப்படு வது ஏன்? இதுகுறித்து எந்த விசாரணையும் இல்லை; எந்த பதிலும் இல்லை. ஏன் இந் தளவுக்கு பயம்?’’ என்று கேட் டுள்ளார். தனது ட்விட்டர் பக் கத்தில் ராகுல் காந்தி, ‘மோதானி’ என்று குறிப்பிட்டுள்ளார். இதில்  பிரதமர் மோடி – அதானி ஆகி யோரின் பெயரை ஒன்றிணைத்து சூசகமாக கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *