ஏன் இந்த அச்சம்? ட்விட்டர் பக்கத்தில் ராகுல் கேள்வி

Viduthalai
1 Min Read

புதுடில்லி, மார்ச் 29 காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பி உள்ளார். அதில், ‘‘அதானி குழுமத்துக்கு எல்அய்சி, எஸ்பிஅய் வங்கி பணம் வழங்கப்படுகிறது. பொது மக்களின் ஓய்வூதிய பணம் கூட அதானி குழுமத்துக்கு வழங் கப்பட்டு வருகிறது. மக்கள் ஒய் வூதிய பணத்தை ஏன் அதானிக்கு வழங்க வேண்டும்.

‘மோதானி’ தொடர்பு பற்றி ஹிண்டன்பர்க் அறிக்கை வெளி யான பிறகு கூட, இபிஎப்ஓ பணம் அதானிக்கு வழங்கப்படு வது ஏன்? இதுகுறித்து எந்த விசாரணையும் இல்லை; எந்த பதிலும் இல்லை. ஏன் இந் தளவுக்கு பயம்?’’ என்று கேட் டுள்ளார். தனது ட்விட்டர் பக் கத்தில் ராகுல் காந்தி, ‘மோதானி’ என்று குறிப்பிட்டுள்ளார். இதில்  பிரதமர் மோடி – அதானி ஆகி யோரின் பெயரை ஒன்றிணைத்து சூசகமாக கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *