சென்னை குரோம்பேட்டை திருக்குறள் பேரவை விழா

Viduthalai
1 Min Read

அரசியல்

குரோம்பேட்டை, மார்ச் 29- சென்னை குரோம்பேட்டை திருக்குறள் பேரவை சார்பில் லட்சுமி அம்மாள் நினைவு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 26.3.2023 அன்று மாலை 5 மணியளவில்  1330 திருக்குறள் பாக்களை மனப்பாடம் செய்து ஒப்பித்து சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா பேரவை தலைவர் தெ.பொ.இளங் கோவன் தலைமையில் பேரவை துணைத் தலைவர் மருத்துவர் புலவர் பாண்டியன் முன்னிலையில் நடந்தது.

விழாவில் மாணவ, மாணவிக ளுக்கு பயனாடை மற்றும் அடை யாள அட்டை அணிவித்து சான்றிதழ் வழங் கினர். திராவிடர் கழக பிரச்சார செயலாளர் தோழர் அ.அருள்மொழி தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் பய னாடை அணிவித்து மரியாதை செய் தனர் விழாக் குழுவினர்.

திராவிடர் கழக பிரச்சார செய லாளர் தோழர் அ.அருள்மொழிக்கு “திருக் குறள் அறம்” என்னும் விருது மற்றும் நினைவுப் பரிசுகள் வழங் கினர் விழாக் குழுவினர். தோழர் அ.அருள்மொழி அவர்கள் பெற் றோர்கள், குழந்தைகள், விருந்தினர் கள் மத்தியில் தந்தை பெரியார் அவர் களின் தத்துவங்களை, பெரியார் அவர்களின் வாழ்க்கை நெறி களை மற்றும் திருவள்ளுவர் திருக்குறள் தெளிவுரைகளை மக்களின் வாழ்க் கைக்கு தகுந்தாற்போல் வரலாற்று நிகழ்வுகளை கதை வழியாக மிக அருமையான கருத்துகளை வழங்கி உரையாற்றினார்.

குரோம்பேட்டை திருக்குறள் பேரவை சார்பில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஆண்டுக்கு தலா ரூ.10.000 வழங்கி பெருமைப்படுத்துகிறார்கள்.

விழாவில் திராவிடர் கழகம் சார் பில்  கழக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், பாலு, மா.இராசு, பூவை.க.தமிழ்ச்செல்வன், தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் எஸ்.ஆர்.வெங்கடேஷ், மாடம்பாக்கம் அ.கருப்பையா, பூவை.பெரியார் மாணாக்கன், மா. குண சேகரன், சந்திரசேகர், தாம்பரம் சு.மோகன்ராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *