திருந்துமா ஒன்றிய பிஜேபி அரசு? லட்சத்தீவு தொகுதி எம்.பி. முகமது ஃபைசல் தகுதி இழப்பு ரத்து

2 Min Read

புதுடில்லி, மார்ச் 31- லட்சத்தீவு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ஃபைசல் பி.பி.-யின் தகுதி இழப்பு நடவடிக்கை திரும்பப் பெறப்படுவதாக மக் களவை செயலாளர் 29.3.2023 அன்று தாக்கீது வெளியிட்டுள்ளார். ஃபைசல் மீதான குற்றவியல் வழக்கின் தண்ட னையை நிறுத்திவைப்பதாக அறிவித்த கேரளா உயர் நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப் பட்டுள்ள மக்களவை செயல ரின் அறிக்கையில், “முகமது ஃபைசல் பி.பி,யின் தகுதி இழப்பு நடவடிக்கைக்கு தடை விதித்து ஜன.25, 2023இல் கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப் பின் படி, 2023ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி இந்திய அரசமைப்பு சட்டப்பிரிவு 102(1)(மீ), மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் 1951 பிரிவு 8 படி அறிவிக்கப்பட்ட தகுதி இழப்பு அறிவிப்பு திரும்பப் பெறப்படுகிறது” என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

எம்.பி. ஃபைசல், தனது தகுதி இழப்பு நடவடிக்கைக்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்தும்கூட, மக்களவை செயலகம் தனது தகுதி இழப்பை இன்னும் திரும்பப் பெறவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அவர் மீதான தகுதி இழப்பு நடவடிக்கை திரும்பப் பெறப் படுவதாக அறிவிக்கப்பட்டுள் ளது.

முன்னதாக, லட்சத்தீவின் தேசியவாத காங்கிரஸ் கட் சியை சேர்ந்தவர் முகமது பைசல். கடந்த 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது அப்போதைய ஒன்றிய அமைச் சர் சையதுவின் மருமகன் முகமது சலியாவை கொலை செய்ய முயற்சித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் முகமது பைசலுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டதால் அவரது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட் டது.ஆனால், முகமது பைசல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், மக்களவை உறு:பபினர் பதவியில் இருந்து அவரை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று உத்தர விட்டது. தற்போது மக்களவை உறுப்பினர் பதவியுடன் நாடா ளுமன்ற கூட்டத் தொடரில் முகமது பைசல் பங்கேற்று வருகிறார். 

குற்றவியல் வழக்கில் சூரத் நீதிமன்றத்தால் தண்டனைக் குள்ளான வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியின் மக்களவை உறுப் பினர் பதவி தகுதி இழப்பு செய் யப்பட்டிருக்கும் வேளையில்  ஒன்றியத்தில் முகமது ஃபைசல் விவகாரம் அதிக கவனம் பெறுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *