பெங்களூரு, மார்ச் 31 கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக ஏபிபி, சி ஓட்டர் கருத்துக் கணிப்பில் தெரியவந் துள்ளது. கருநாடக சட்டப்பேரவைத் தேர்தல் மே 10-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மேனாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதால் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஏபிபி, சி ஓட்டர் ஆகிய நிறுவனங்கள் இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றிப் பெறும் என கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளன. அதில்,224 இடங்களைக் கொண்ட கருநாடகாவில் காங்கிரசுக்கு 115 முதல் 127 இடங்கள் கிடைக்கும். பாஜகவுக்கு 68 முதல் 80 இடங்களும், மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 23 முதல் 35 இடங் களும் மற்ற கட்சிகளுக்கு 2 இடங்கள் கிடைக்கும் என தெரியவந் துள்ளது.
கருநாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு: கருத்துக் கணிப்பில் தகவல்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books