அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் அமைச்சர் வலியுறுத்தல்

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை, ஏப்.1  தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளில் முகக்கவசம் கட்டாயம் என தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச் சர் மா.சுப்பிரமணியன் உத்தர விட்டுள்ளார்.

கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து உலகம் முழுவதும் மீண்டும் தாண்டவம் ஆடுகிறது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லை கரோனா வழிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசு மருத்துவ மனைகளுக்கு வருவோர் 100 விழுக்காடு முகக்கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைகளுக்கு வரும் நோயாளிகள், உடன் வருவோர், மருத்துவர்கள், பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி யுள்ளார். மக்கள் பொது இடங் களில் முகக்கவசம் அணிவது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய தினசரி கரோனா பதிப்பு இந்தியாவில் 3000க்கு மேலாகவும் தமிழ்நாட்டில் 100க்கு மேலாகவும் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை தீவிரப்படுத்த வேண்டு மென்று ஒன்றிய அரசு அறிவுறுத் தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *