ராகுல்காந்தி பதவி பறிப்பு எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்க பா.ஜனதா திட்டமா?

Viduthalai
1 Min Read

சி.பி.அய். மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றச்சாட்டு

அரசியல்

 திருச்சி, ஏப், 1- ராகுல்காந்தி மீதான நடவடிக் கையானது எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளு மன்றத்தை உருவாக்க பா.ஜனதா திட்டமிட்டு செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப் பேற்றதில் இருந்து தற்போது வரை ஒரு புதிய பொதுத்துறை நிறுவனத்தையும் உருவாக்க வில்லை.

அதற்கு பதிலாக 23 பொதுத்துறை நிறுவ னங்களை தனி யாருக்கு விற்பனை செய்துள்ளார். அதானி, அம்பானி குடும்பத்துக்கு மிகுந்த விசுவா சியாக மோடி செயல்படுகிறார். அதானி பிரச் சினைக்காக நாடாளுமன்ற அவைகளை ஒத்தி வைக்கும் நிகழ்வு இந்தியாவில் தான் நடக்கிறது.

அதானி கடன்களை ஒன்றிய அரசு எப்படி தள்ளுபடி செய்கிறதோ, அதேபோல் மாணவர் களின் கல்விக் கடனையும் ஒன்றிய அரசு முழுமை யாக ரத்து செய்ய வேண்டும். ஒரேநாடு, ஒரே கட்சி என்ற சர்வாதிகாரப்  போக்கை கையாளும்வகையில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது.

எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்க திட்டமிட்டு ராகுல்காந்தி மீதான அடக்குமுறையை முன்னெடுத்துள்ளது.

பா.ஜ.க.வை விரைவில் அகற்றுவதே எங்களின் நோக்கம். அ.தி.மு.க.வை அடிப்படையாக கொண்டு தமிழ்நாட்டுக்குள் பா.ஜ.க. நுழைய முயற்சித்து வருகிறது.

 அதற்கு இடம் கொடுத்ததும் அ.தி.மு.க. தான். பா.ஜ.க. சொல்வதை அ.தி.மு.க. செய்வதால் அவர்கள் கூட்டணி தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆனால் எங்களுடைய கூட்டணி கொள்கைக்கான கூட்டணி. இப்போது எந்த நிலையில் இருக்கிறமோ, அதே இடத்தில் தொடர்ந்து நீடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *