தாம்பரத்திலிருந்து துறைமுகம் வரை செல்லும் மின் தொடர் வண்டியில் பெண்களுக்கென உள்ள பெட்டியில் ஒரு மன நோயாளி நுழைந்து ரகளை செய்தார்.
உடனே ஒரு பெண் அலைபேசியில் புகார் செய் கிறார். அதிகாரியோ ஹிந்தியில் பதில் சொல்கிறார். புகார் செய்தவருக்கு ஒன்றும் புரியவில்லை.
எழும்பூரில் இறங்கிய புகார் கொடுத்த அந்த சகோதரிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரி சொன்ன பதில் அதிர்ச்சியை அளித்தது. “நானும் தமிழ் தான்; ஆனாலும் ஹிந்தியில் தான் பதில் சொல்லுவேன். நீங்களும் ஹிந்தியைக் கற்றுக் கொள்ளுங்கள்” என்று திமிராகப் பதில் கூறியுள்ளார்.