ஜெகதாப்பட்டினம் மீனவர் நல பாதுகாப்பு மாநாடு: அமைச்சருடன் கழகப் பொறுப்பாளர்கள்

1 Min Read

அரசியல்

அறந்தாங்கி மாவட்ட தலைவர் க.மாரிமுத்து, மண்டல இளைஞர் அணி செயலாளர் க.வீரையா, அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி தலைவர் ப.மகாராசா, அறந்தாங்கி நகர அமைப் பாளர் ஆ.வேல்சாமி, பெரியார் பிஞ்சு மா.வீ.செம்மகிழன் ஆகியோர் சுற்றுச்சூழல் கால நிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களை சந்தித்து ஜெகதாப்பட்டினம் மீனவர் நல பாதுகாப்பு மாநாடு அழைப்பிதழை வழங்கினர். அமைச்சர் பெற்றுக் கொண்டு மாநாட்டில் நிச்சயம் பங்கேற்ப தாக தெரிவித்தார். ஆசிரியரின் நலம் குறித்து விசாரித்தார்.

அரசியல்

கன்னியாகுமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை திமுக குருந்தன்கோடு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நெய்யூர் தா.ஜெபராஜ் வழங்கினார். உடன் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் உ.சிவதாணு, பெரியார் பிஞ்சுகள் ஜெ.ஜெபிசா, ஜெ.தீபிகா தோழர் இஸ்மாயில் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *