இதே பதிலைச் சொல்லுமா ‘தினமலர்!’

1 Min Read

பருப்பு, சர்க்கரை, வெங்காயம் உள்பட அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலையும் பிரதமர் மோடி ஆட்சியில் உயர்ந்து உள்ளது. இதனால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு 2024 இல் ‘இந்தியா’ கூட்டணி முடிவு கட்டும்!

– காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

தினமலரின் பதில்: நடப்பாண்டு தென்மேற்குப் பருவ மழை பொய்த்து பயிர்கள் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டு, இவற்றின் விலைகள் உயர்ந்துள்ளன என்பதுதான் உண்மை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தாலும், இதுதான் நடந்திருக்கும் என்பதிலும் ‘டவுட்டே’ இல்லை. இதை மத்திய அரசின் தோல்வி என்று திசை திருப்புவது நியாயமா?

– ‘தினமலர்’, 3.11.2023, பக்கம் 8

நமது பதிலடி: காங்கிரஸ் ஆட்சியில் ‘தினமலர்’ குறிப்பிட்டுள்ள அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்திருந்தால், இதே பதிலை ‘தினமலர்’ கூறுமா? 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *