‘தினமலருக்கு’ சந்தேகமா – தொடை நடுக்கமா?

1 Min Read

அகில இந்திய அளவில் சமூகநீதி மாநாடு தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் காணொலி வழி நடைபெறுகிறது. 

அகில இந்திய அளவில் பல மாநில முதலமைச்சர்களும், ஓய்வு பெற்ற நீதிபதிகளும், மூத்த வழக்குரைஞர்களும், இந்திய அளவில் சமூகநீதியை அழுத்தமாகப் பதிவு செய்யப் பாடுபடும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, வைகோ எம்.பி., எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., போன்றவர்களும் பங்கேற்கின்றனர்.

2024 மக்களவைத் தேர்தலுக்குமுன் சமூகநீதி சக்திகள் ஓரணியில் திரளுகின்றன என்ற நிலையில், திரி நூலாகிய ‘தினமலர்’ எப்படி தலைப்புப் போடுகிறது தெரியுமா?

‘‘ஸ்டாலின் நடத்தும் சமூகநீதி மாநாடு அரசியல் ஆதாயம் தருமா?” என்பதுதான் ‘தினமலர்’ தலைப்பு.

சமூகநீதி என்பது அரசியல் ஆதாயத்துக்கானதல்ல – பெரும்பாலான மக்களுக்கானது – அரசியல் சட்டப்படிக் கானது – அதுவே அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது.

‘தினமலர்’ கூட்டத்தின் அச்சம்தான் இந்தத் தலைப்புக் கான காரணம், புரிகிறதோ!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *