தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆலோசனைப்படியும், கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன் ஒப்புதலின் படியும், சோழிங்கநல்லூர் மாவட்ட கழக காப்பாளர்
ஆர்.டி.வீரபத்திரன் முன்னிலையில் அறிவன் – சோழிங்கநல்லூர் மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளராக, மாநில வழக்குரைஞர் அணி துணைச் செயலாளர் துரை.அருணால் நியமிக்கப்பட்டார். பி.சி.ஜெயராமன், சோழிங்கநல்லூர் கழக மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு, மாவட்ட துணைத் தலைவர் கலைச்செல்வன், சரவணக்குமார், தொழிலாளர் அணி மணிகண்டன், இளைஞர் அணித் தலைவர் உ.நித்யானந்தம் ஆகியோர் உடனிருந்தினர். (19.04.2026).
