டில்லியில் காற்று மாசுபாடு: ஒன்றிய அமைச்சர் எங்கே?

1 Min Read

புதுடில்லி,நவ.5-கடந்த சில ஆண்டு களாக நாட்டின் தலைநகர் மண்டல மான டில்லியில் விழாக்கள் மற்றும் குளிர் காலங்களில் காற்று  மாசு அதிகரிப்பது வழக்கமாக உள்ளது. நடப்பாண்டிலும் வழக்கம் போல காற்றின் தரம் வெகுவாக குறைந்துள்ள நிலையில், காற்றின் தரக் குறியீடு 400 புள்ளிகளைத் தாண்டி பதிவாகி யுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளுக்கு நவ.3 மற்றும் 4 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப் பட்டது. 

இதுகுறித்து டில்லி அமைச்சர் கோபால் ராய் மேலும் கூறுகையில், “டில்லி காற்று மாசுபாட்டால் மூச்சுத் திணறும் வேளையில் ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் (பூபேந்தர் யாதவ்) எங்கே? பாஜகவுக்கு எந்த ஒரு  பொறுப்பும் இல்லையா? மாசு பாட்டை ஏற்படுத்தக்கூடிய லாரிகள், வணிகப் பயன்பாட்டுக்கான வாகனங்கள் நிறுத்தம் என டில்லி அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து  வருகிறது. ஒன்றிய அரசும், எதிர்க்கட்சித் தலைவர்களும் இதுகுறித்து விவாதிக்க அவசரக் கூட்டம் நடத்தவேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *