காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் துணைப் பதிவாளராக பதவி உயர்வு பெற்று, பணியை நிறைவு செய்த துரை.செல்வம் முடியரசனுக்கு மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. நிகழ்வில் மாவட்டத் தலைவர் ச.அரங்கசாமி, மாவட்டச் செயலாளர் ம.கு.வைகறை, மாவட்ட பகுத்தறிவாளர் தலைவர் டாக்டர் சு. முழுமதி, பெரியார் பெருந்தொண்டர் ப. சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.