மன்னார்குடி கழக மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் செருமங்கலம் உடையார் தெருவில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தை முன்னிட்டு அப்புறப்படுத்தப்பட்டு சற்று தொலைவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி முன்பாக மறு சீரமைப்பு பணி 02.04. 2023 அன்று நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட துணை தலைவர் இன்பக் கடல், மாவட்ட இணை செயலாளர் புட்பநாதன், கழக பேச்சாளர் இராம.அன்பழகன், மாவட்ட ப.க. ஆசிரியரணி தலைவர் வீரமணி, மன்னை ஒன்றிய தலைவர் தமிழ்செல்வம், மன்னை நகர செயலாளர் இராமதாசு, நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் அய்யப்பன், நீ பா.ஒன்றிய அமைப்பாளர் சக்திவேல், நீடா.ஒன்றிய துணை தலைவர் வீராசாமி, எடமேலையூர் லெட்சுமணன், மேலவாசல் கிளை தலைவர் திரிசங்கு மற்றும் கழக தோழர்கள் சருமங்கலம், கருப்பைய,£ பொறியாளர் மணவாளன், காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பெரியார் சிலை அமைக்க அனைவரையும் ஒருங்கிணைத்து சிறப்பான ஏற்பாடுகளை தி.மு.க. பொறுப்பாளர் இராமலிங்கம் செய்து உதவினார்.