குன்னம் சட்டமன்ற தொகுதி செந்துறை வடக்கு ஒன்றியம் இருங்கலாகுறிச்சி கிராமத்தில் இளைஞர் நற்பணி மன்றம் நடத்தி வரும் முதியோர் மதிய உணவு வழங்கும் திட்டத்தில், கடந்த 4.9.2022 அன்று மறைந்த பெரியார் பெருந்தண்டர் பெரியார் விருது பெற்ற
சி.சிவசுப்பிரமணியம் அவர்களின் 85ஆவது பிறந்தநாள் மகிழ்வாக உணவு வழங்கத் தொடங்கி – மாதத்தில் ஒரு நாள் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்கி வருகின்ற னர். அதில் நேற்று (2.4.2023) குன்னம் சட்டமன்ற உறுப் பினரும், தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சரு மான சா.சி.சிவசங்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இருங்கலாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஜெயதேவன் சட்டீஸ்கர் மதிய உணவு வழங்கினார் – கழக மண்டல இளைஞர் அணி செயலாளர் செந்தில் ஏற்பாடு செய்திருந்தார். ஆற்றல் மிகு செந்துறை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எழில்மாறன் கோபி உள்ளிட்ட தோழர்களுடன் ஜெயதேவன் குடும்பத்து பேரப் பிள்ளைகளும் கலந்து கொண்டனர்.