பொத்தனூர் பெரியார் படிப்பகத்தின் சார்பாக சமூகநீதிக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் 31.3.2023இல் பொத்தனூர் அண்ணா சிலை அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு பொத்தனூர் கழக தலைவர் அன்புமணி தலைமை வகித்தார். வேலூர் சிவா தியேட்டர் நான்கு சாலையில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக துணைத்தலைவர் அசேன் தலைமை வகித்தார் இராம அன்பழகன் சிறப்புரை ஆற்றினார். பெரியார் அறக் கட்டளை தலைவர் க.சண்முகம், மாவட்ட பக தலைவர் வழக்குரைஞர் ப.இளங்கோ, மாவட்ட கழக தலைவர் அ.கு.குமார், மற்றும் வழக்குரைஞர் ஜெகநாதன், சரவணன், பொன்னுசாமி, வீரமுருகன், செல்வகுமார், மருத.அறிவாயுதம், வசந்தி, மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.