கலாசேத்ரா மாணவிகள் பிரச்சினை – மகளிர் ஆணையம் அறிக்கை தாக்கல்

1 Min Read

சென்னை, ஏப். 5- சென்னை திருவான்மியூரில் உள்ள கலா சேத்ரா அறக்கட்டளையின் கீழ் ருக்மணி தேவி நுண்கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் மாணவிகளுக்கு நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைகள் கற்றுத் தரப்படுகின்றன. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவி களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக மாணவிகள் போராட்டம் நடத்தினர். காவல் துறையிடம் புகார் அளித்தனர்.

மாணவிகளின் புகார் அடிப்படையில் உதவிப் பேராசிரியர் ஹரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டார். இந்த புகார் தொடர்பாக தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரி, அந்தக் கல்லூரி மாணவிகளி டம் விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் குமாரி நேற்று மாலை தலைமைச் செயலகத்திற்கு வந்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்புவை சந்தித்து பேசினார். அப்போது 200 பக்கங்களுக்கு மேல் கொண்ட விசாரணை அறிக்கையை தலைமைச் செயலாளரிடம் குமாரி கொடுத்தார்.

இதுபற்றி குமாரியிடம் கேட்ட போது, பாலியல் புகார்கள் தொடர்பாக இதுவரை நடத்தப் பட்ட விசாரணையை அறிக் கையாக தயாரித்து தலைமைச் செயலாளரிடம் கொடுத்துள்ளேன் என்று தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *