கூட்டத்திற்கு நடுவே ஆம்புலன்ஸ்கள்! வழிவிட்டு, பின் பேச்சைத் தொடர்ந்த ஆசிரியர்!

1 Min Read

திருச்சி மேற்கு தொகுதிக்கான பிரச்சாரத்தில் தமிழர் தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்தார். அமைச்சர் கே.என்.நேரு அருகில் நின்று அனைவரையும் வணங்கி வாக்கு சேகரித்தார். தமிழர் தலைவரின் பிரச்சார வாகனத்தைச் சுற்றி திரளான கூட்டம். ஏறத்தாழ சாலை முழுவதும்! ஊடக வாகனங்களும் நின்று காட்சிப் பதிவு எடுத்துக் கொண்டிருந்தன. அப்போது ஆம்புலன்ஸ் ஒன்று எதிரில் விரைந்து வந்து கொண்டிருந்தது. கூட்டத்தை நெருங்கும்போது அதன் ஒலியைக் கேட்ட தமிழர் தலைவர், உடன் கூட்டத்தை விலக்கி வழிவிடுமாறு தோழர்களுக்கும், பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். எவ்விதத் தடங்கலும் இன்றி ஆம்புலன்ஸ் விரைந்து செல்ல வழிவகுத்தனர் தோழர்கள். மக்கள் நலனுக்காகத் தான் நாம் வந்திருக்கிறோமே தவிர, அவர்களின் அவசியத் தேவைகளுக்கு நாம் குறுக்கே நிற்கக் கூடாது என்று சொல்லி, வழிவிட்டோருக்கு நன்றி சொன்னபடி பேச்சைத் தொடர்ந்தார் ஆசிரியர்.  நேற்று முன் தினம் கம்பம் தொகுதியில், கம்பம் ராமகிருஷ்ணன் அவர்களுக்காக வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தபோதும், இதே போல ஆம்புலன்ஸ் வாகனத்தின் ஒலியைக் கேட்டு, வாகனத்தின் பின்புறம் நின்றிருந்தவர்களை ஒதுங்கி வழிவிடச் சொல்லி, பின்னர் கூட்டத்தை ஆசிரியர் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *