நன்னிலம், ஏப். 9– திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.டி.பி.அய். கட்சியைச் சார்ந்த முகமது முபாரக் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்நிகழ்ச்சியின் போது நன்னிலம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை முகமது முபாரக் மாலை அணிவித்து கூட்டணி கட்சித் தோழர்களில் ஒலி முழக்கத்துடன் மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகம் சார்பில் திருவாரூர் மாவட்ட தலைவர் எஸ். எஸ்.எம்.கே.அருண் காந்தி, மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் வீ. மோகன், மாவட்ட காப்பாளர் வீர கோவிந்தராசு, மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் வீரையன், மாவட்ட இளைஞரணி தலைவர் கோ.பிளாட்டோ, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் செ.இரவிக்குமார், மாவட்ட மாணவர் கழக செயலாளர் அறிவுச்சுடர், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கரிகாலன், தமிழவன், நன்னிலம் ஒன்றிய பொறுப்பாளர்கள் சஞ்சீவி, தமிழ்மணி, சரவணன், குடவாசல் ஒன்றிய தலைவர் ஜெயராமன், பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. சார்பில் நன்னிலம் நகரச் செயலாளர் ஒன்றியச் செயலாளர்கள் மனோகரன், கேப்டன் செல்வராஜ், பேரூராட்சி தலைவர் ராஜூ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒன்றிய செயலா ளர் டேவிட், மாவட்ட குழு உறுப்பினர் நடராஜன், காங்கிரஸ் பேரியக்கம் சார்பில் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் உலகநாதன், தேமுதிக ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், மதிமுக பொறுப்பாளர்கள் சிவா, மணிவண்ணன், எஸ். டி,பி,அய். கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் ஆசிப், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஒன்றிய தலைவர் வாக்குறுதி, மாவட்டத் துணைத் தலைவர் நன்னிலம் அசார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து நன்னிலம் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கே. கலைவாணன் முன்னிலையில் மனு தாக்கல் செய்தார்.

