புதுடில்லி, ஏப்.6- உலகில் பெண்களுக்குப் பாது காப்பில்லாத முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா 9 ஆவது இடத்தில் உள்ளது என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் பட்டியலில் இந்தியா 9 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. பெண் பயணிகளுக்கு எந்த நாடுகள் மிகவும் ஆபத்தானவை என் பதை தீர்மானிக்கும் முயற்சியில், ஊடகத்துறை இணையர்களான ஆஷர் மற்றும் லிரிக் பெர் குசன் ஆகியோர் விரிவான ஆய்வு ஒன்றை நடத்தி, மிகவும் பிரபலமான 50 சுற்றுலா நாடுகளை வரிசைப்படுத்தியுள்ளனர்.
அதாவது, வீதிகளில் பெண்களுக்கு இருக் கும் பாதுகாப்பு, வேண்டுமென்றே படுகொலை செய்யப்படுதல், கணவர் அல்லாதவர்கள் மூலமான பாலியல் வன்முறை, கணவர் மற்றும் நெருங்கியவர்கள் மூலமான பாலியல் வன் முறை, சட்டரீதியான பாகுபாடு, உலகளாவிய பாலின இடைவெளி, பாலின சமத்துவ மின்மை ஆகிய குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த 50 நாடுகளையும் வரிசைப்படுத் தியுள்ளனர். மேலும், வரிசைப்படுத்துதலில் பெண்களுக்கு ஆபத்தான முதல் 10 நாடு களையும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
முதலிடத்தில் தென்னாப்பிரிக்கா
இந்தப் பட்டியலில்தான், பெண்களுக்கான மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்றாக இந் தியா 9 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. பட்டி யலில் முதலிடத்தில் இருப்பது தென்னாப்பிரிக்கா ஆகும்.
தனியாக பயணிக்கும் பெண் பயணிகளுக்கு உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடாக தென்னாப்பிரிக்கா உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இரவில் தனியாக செல்வதை 25 சதவிகிதம் பேர் மட்டுமே பாதுகாப்பாக உணர்கின்றனர். இங்கு 40 சதவிகிதத்திற்கும் அதிகமான பெண்கள் அவர்களின் வாழ்நாளில் பாலியல் வன்கொடு மையை எதிர்கொள்கின்றனர். கூடுதலாக, பெண்களை வேண்டுமென்றே படுகொலை செய்வதிலும் தென்னாப்பிரிக்கா மோசமான தர வரிசையில் உள்ளது. குறியீட்டில் “எப்” பெற்ற ஒரே நாடாக தென்னாப்பிரிக்கா உள்ளது.
பெண்களுக்கு ஆபத்தான நாடுகளில் பிரே சில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு 28 சதவிகிதம் பெண்கள் மட்டுமே இரவில் தனி யாகச் செல்வதை பாதுகாப்பாக உணர்கின்றனர். பெண்களுக்கு எதிரான வேண்டுமென்றே நடக்கும் கொலைகள் விகிதத்தில் மூன்றாவது இடத்தில் பிரேசில் உள்ளது. மேலும், இங்குள்ள பெண்களில் 36.9 சதவிகிதம் பேர், தங்கள் நெருங்கிய கூட்டாளிகளிடமிருந்து உடல் அல்லது பாலியல் வன் முறையை சந்திக்கின் றனர். இதில், உலகளவில் பிரேசில் 6 ஆவது இடத்தை வகிக்கிறது.
பெண்களுக்கு எதிராக வேண்டுமென்றே நடத்தப்படும் கொலைகளில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் ரஷ்யா, பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பெறுகிறது.
ரஷ்யாவுக்கு அடுத்த நான்காவது இடத்தில் மெக்சிகோ உள்ளது. மெக்சிகோவில் சுமார் 33 சதவிகிதம் பெண்கள் மட்டுமே இரவில் தனி யாக நடப்பதை பாதுகாப்பாக உணர்கின்றனர். கூடுதலாக, கணவர் அல்லாதவர்கள் மூலமான பாலியல் வன்முறையில் மெக்சிகோ மூன்றாவது இடத்தில் உள்ளது. சுமார் 16 சதவிகிதம் பெண் கள் பாலியல் வன்முறையைச் சந்திக்கின்றனர். உலக அளவில் பாலின இடைவெளியில் முதல் இடத்தைப் பிடிக்கும் ஈரான், பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டி யலில் 5 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. பொருளாதார பங்கேற்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் அரசியல் அதிகாரமளித்தல் ஆகிய வற்றில் ஆண்களுக் கும், பெண்களுக்கும் இடையிலான வேறு பாடுகள், பெண்களுக்கு எதிரான சட்டரீதியான பாகுபாடுகளில் ஈரான் மூன்றாவது இடத்தில் உள்ளது.
பெண்களுக்கு எதிரான திட்டமிட்ட கொலை களிலும், இரவில் தனியாக செல்வதை பாதுகாப்பாக உணர்வதிலும் உலகளவில் அய்ந்தாவது இடத்தை (33 சதவிகிதம்) வகிக்கும் டொமினிகன் குடியரசு, பெண்களுக்கு ஆபத் தான நாடுகளின் பட்டியலில் 6 ஆவது இடத் தைப் பெற்றுள்ளது. பெண் பயணிகளுக்கு மிகவும் ஆபத்தான ஏழாவது நாடாக எகிப்து வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது. இங்கு 47 சத விகிதம் பெண்கள் மட்டுமே இரவில் தனியாக நடப்பதை பாதுகாப்பாக உணர்கிறார்கள். எகிப்து நான்காவது உலக பாலின இடை வெளியையும், ஏழாவது மிக உயர்ந்த பாலின சமத்துவமின்மையையும் கொண்டுள்ளது. இதேபோல மொராக்கோ நாட்டுப் பெண்களில் சுமார் 45 சதவிகிதம் பேர் தங்கள் நெருங் கிய துணையிடமிருந்து உடல் அல்லது பாலியல் ரீதியான வன்முறையை அனுபவிக்கின்றனர். மோசமான நாடுகளில் பட்டியலில் மொராக்கோ 8 ஆவது இடத்தை வகிக்கிறது.
9 ஆவது இடத்தில் இந்தியா!
இந்த வரிசையில்தான் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளில் இந்தியா 9 ஆவது இடத்தைப் இடம்பெற்றுள்ளது. கணவர் அல்லது நெருக்கமான நபர்கள்மூலம் பெண் களுக்கு இழைக்கப்படும் வன்முறையில் இந் தியா அய்ந்தாவது இடத்தில் உள்ளது. 37.2 சத விகிதம் பெண்கள் வன்முறைக்கு உள்ளாகின்ற னர். இதுதவிர பாலின சமத்துவமின்மை குறியீட்டில் உலக ளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் பெண்கள் மீதான வன் முறையை சுமார் 45 சதவிகிதம் பேர் நியாயப் படுத்தும் நிலைமை உள்ளது. இந்தியாவுக்கு அடுத்து, பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளில் பட்டியலில் பத்தாவது இடத்தில் தாய்லாந்து உள்ளது. கணவர் அல்லது நெருக் கமான நபர் மூலமான வன்முறையில் தாய் லாந்து இரண்டா வது இடத்தில் உள்ளது. சுமார் 44 சதவிகிதம் வன்முறைக்கு உள்ளாகின்றனர்.
மறுபுறத்தில், ஸ்பெயின், சிங்கப்பூர், அயர் லாந்து, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, நார்வே, போர்ச்சுகல், குரோஷியா, கனடா மற்றும் போலந்து ஆகிய நாடுகள் பெண்களுக்கு பாதுகாப்பான 10 நாடுகள் என தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.