உலக மகளிர் தின விழா கருத்தரங்கம் – படத்திறப்பு

Viduthalai
2 Min Read

அரசியல்

ஊற்றங்கரை, ஏப்.6- ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் கடந்த 26.3.2023 அன்று  காலை 10 மணியளவில் ஊற்றங்கரை வித்யா மந்திர் விருந்தினர்  மாளிகையில்  உலக மகளிர் தின விழா கருத் தரங்கம் – படத்திறப்பு – பாராட்டு என மூன்று நிகழ்வுகளை உள்ளடக்கி வெகுசிறப்புடன் கொண்டாடப்பட்டது

நிகழ்வின் தொடக்கமாக  ஊற்றங்கரை ஒன்றிய திராவிட மகளிர் பாசறையின் தலை வர் அ.முருகம்மாள் வரவேற்புரை ஆற்ற விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளாளர் ஆடிட்டர்.ந.இராசேந்திரன் மாத அறிக்கை வாசித்தார். இக் கூட்டத்திற்கு ஊற்றங்கரை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் உஷாராணி குமரேசன் தலைமை தாங்கினார்

ஊற்றங்கரை பேரூராட்சியின் பெண் உறுப்பினர்களான சுமித்ரா தவமணி, கா.கனகேஸ்வரி, எஸ்.அபிபுனிஷா, ம.சாகிதா பேகம்,  எம்.மணிமேகலை, கவிதா குப்புசாமி ஆகியோர் உரையாற்றி மகளிர் தின வாழ்த் துகளை அனைவருக்கும் தெரிவித்தனர் . நிகழ்வில்  தொண்டறத்தாய் அன்னை மணி யம்மையார் அவர்களின் படத்தினை  10ஆவது   வார்டு பேரூராட்சி மன்ற உறுப் பினர்  நிர்மலா கந்தசாமி திறந்து வைத்தார் . திராவிட இயக்க வீராங்கனை சத்தியவாணி முத்து படத்தினை ஊற்றங்கரை பேரூராட்சி யின் துணைத்தலைவர் கலைமகள் தீபக் திறந்து வைத்து உரையாற்றினார். இந்தி யாவின் முதல் பெண் முதலமைச்சராக விளங்கிய ஜானகி  ராமச்சந்திரன் அவர்களின் படத்தினை சென்னம்மாள் ஆறுமுகம் திறந்து வைத்து உரையாற்றினார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக ஊற்றங் கரையில் கல்வி பணியாற்றி வரும் சிவா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ஜோதி செல்வராசன் விடுதலை வாசகர் வட்டத்தால் பாராட்டுக்குரியவராக தேர்ந் தெடுக்கப்பட்டு பாராட்டப்பட்டார்.பங்கேற் றிருந்த அனைத்து மகளிர்க்கும் மகளிர் தின வாழ்த்துகளை கூறி விடுதலை வாசகர் வட்டத்தின் செயலாளர் பழ.பிரபு  பாராட்டுரை நிகழ்த்தினார் .அனைவரின் பாராட்டுகளை யும்  ஏற்ற பின்னர்   கல்வியாளர் ஜோதி செல்வராசன் ஏற்புரை நிகழ்த்தினார்

நிகழ்வில் ஆடிட்டர் ஜெய்சுதா, அனைத்து மகளிர் நிலைய காவல் ஆய்வாளர் பி. இலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்து மகளிர் பெற வேண்டிய உரிமைகள் குறித்தும் அதிகார வாய்ப்பை பயன்படுத்திக் மகளிர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் சிறப்பாக  உரையாற்றினார்கள்

நிறைவாக  “பாலியல் நீதிக்கான வேர் களைத் தேடி…” என்னும் தலைப்பில் திரா விடர் கழக மண்டல மகளிரணி செயலர் ந.தேன்மொழி மிகச் சிறப்பான கருத்துரையை நிகழ்த்தினார் . மகளிர் உரிமைக்காக திராவிட இயக்கம் ஆற்றிய பணிகளை சுட்டிக்காட்டி பாலின சமத்துவத்திற்கு எது தடையாக இருக் கிறது என்பதையெல்லாம் சுட்டிக்காட்டி உரையாற்றினார். அவரது உரை பார்வை யாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வருகை தந்த அனைவருக்கும் சிவா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் மாலதி நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. வருகை தந்த அனைவருக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *