தேசிய தகவலியல் மய்யத்தில் 243 சயின்டிஸ்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒன்றிய அரசு பணியாகும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.56 ஆயிரம் முதல் ரூ.1,77,500 வரை ஊதியம் வழங்கப்படும். இது குறித்த விவரங்கள்:
தேசிய தகவலியல் மய்யம் (NIC) என்பது ஒன்றிய அரசின் முக்கியமான தகவல் தொழில்நுட்ப (IT) அமைப்பாகும். 1976ஆம் ஆண்டு நிறுவப்பட்ட NIC, ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளின் நிர்வாகத்தை டிஜிட்டல் முறையில் மேம்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்டது. அரசுத் துறைகளுக்கு e-Governance சேவைகள் வழங்குதல், அரசு இணையதளங்கள், போர்டல்கள் உருவாக்குதல் மற்றும் பராமரித்தல் போன்ற பணிகளில் ஈடுபடுகிறது.
பணியிடங்கள் விவரம்
தற்போது தேசிய தகவல் மய்யத்தில் 243 சயின்டிஸ்ட்-பி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்கள் கேட் (GATE) மதிப்பெண் அட்டை மூலம் நிரப்பப்படவுள்ளன.
கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் – 168 பணியிடங்கள், * மின்னணுவியல் மற்றும் தகவல்தொடர்புகள் – 25 பணியிடங்கள்,
தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு – 50 பணியிடங்கள்
கல்வித் தகுதி:
பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், கேட் (GATE) 2024, 2025 அல்லது 2026 ஆம் ஆண்டு மதிப்பெண் பெற்றிருப்பதும் கட்டாயமாகும்.
மாற்றுத் தகுதிகளாக, கணினி படிப்புகளுக்கான மின்னணுவியல் மற்றும் அங்கீகாரத் துறையின் பி-நிலை (B-level), இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியர்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு பொறியாளர்கள் பட்டதாரி நிறுவனத்தின் அசோசியேட் உறுப்பினர் தகுதியும் ஏற்கப்படும்.
இத்துடன், அறிவியல் முதுகலைப் பட்டம் (MSc), கணினி பயன்பாட்டில் முதுகலைப் பட்டம் (MCA), பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் (ME / M.Tech), அல்லது தத்துவத்தில் முதுகலைப் பட்டம் (M Phil) பெற்றவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். இந்த தகுதிகள் அனைத்தும் மேலே குறிப்பிடப்பட்ட மூன்று சயின்டிஸ்ட்-பி பிரிவுகளுக்கும் பொதுவானதாகும்.
வயது வரம்பு:
30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு மார்ச் 31, 2026 நிலவரப்படி கணக்கிடப்படும்.
பட்டியல் ஜாதி (SC/ST) மற்றும் பழங்குடியினருக்கு (ST) 5 ஆண்டுகள், மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC – NCL) 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் எவ்வளவு?
ஊதியத்தை பொறுத்தவரை தேர்ந்தெடுக்கப்படுபவர் களுக்கு லெவல் 10 ஊதிய விகிதத்தின்படி மாத ஊதயமாக ₹56,100 முதல் ₹1,77,500 வரை வழங்கப்படும்.
தேர்வு முறை
தேர்வு முறையை பொறுத்தவரை, கேட் (GATE) 2024, 2025 அல்லது 2026 ஆம் ஆண்டு மதிப்பெண்கள் அடிப்படையிலும், அதைத் தொடர்ந்து நடைபெறும் தனிப்பட்ட நேர்காணல் (Personal Interaction/Interview) அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கான ஹால் டிக்கெட்டுகள் தனிப்பட்ட நேர்காணல் தேதிக்கு 4 முதல் 7 நாட்களுக்கு முன்னர் மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் இணையதளம் வாயிலாக செலுத்தப்பட வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், பட்டியல் சாதி (SC), பழங்குடியினர் (ST) மற்றும் மாற்றுத்திறனாளி (PWD) விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ₹800 கட்டணமாக செலுத்த வேண்டும்.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேசிய தகவலியல் மய்யத்தின் https://recruitment.nic.in/ என்ற இணையதளத்தின் ‘Careers’ பக்கத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கவனமாகப் பின்பற்றுவது அவசியம்.
ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், தேசிய தகவலியல் மய்யத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://recruitment.nic.in/ வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு மார்ச் 27, 2026 அன்று தொடங்கி ஏப்ரல் 24, 2026 அன்று முடிவடைகிறது.

