தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட வி.எச்.பி. பார்ப்பனர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் விடுதலை!

1 Min Read

சென்னை, ஏப்.8- தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்.பி.வி.எஸ். மணியன் பகிரங்க மன்னிப்புக் கேட்டதால் விடுதலை செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த காலங்களில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஆர்.பி.வி.எஸ்.மணியன், சமூக சீர்திருத்தவாதிகளான தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, தனது பேச்சுக்காக மன்னிப்புக் கோரிய ஆர்.பி.வி.எஸ். மணியன், நீதிமன்றத்தில் இரண்டு முறை பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்தார்:

22/09/2023 அன்று முதல்முறை மன்னிப்புக் கோரினார். 27/09/2023 அன்று மீண்டும் தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி உறுதிமொழிப் பத்திரத்தைத் தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த மன்னிப்புக் கோரலையும், பிரமாணப் பத்திரத்தையும் பரிசீலித்த நீதிபதி கார்த்திகேயன், ஆர்.பி.வி.எஸ்.மணியனை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *