வாயில்லா ஜீவன் என்று கூறவேண்டாம் தாவரங்களும் உரையாடுகின்றன, அவற்றிற்கும் பேசும் திறன் உண்டு – டெல் அவிவ் பல்கலைக்கழக ஆய்வு

1 Min Read

அரசியல்

புயல் வந்தாலும், தீ பரவினாலும், பசித்தாலும் குரல் எழுப்பமுடியாமல் இருப்பது செடிகள் என்று எண்ண லாம்.

ஆனால் தாவரங்களும் தங்களின் ஒவ்வொரு உணர்வுகளை வெளிப்படுத்த வேறுபாடான ஓசை களை எழுப்புகிறது என்று ஆய் வொன்றில் தெரியவந்துள்ளது. ஆனால். மிகவும் அதிகமான அதிர்வெண் கொண்ட  அந்த ஓசையை மனிதர்கள் கேட்க முடியாது என்றும் அதன் ஒலி அலைகளை பதிவு செய்து அதனை மனிதர்கள் கேட்கும் விதமாக வெளியிட ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

அறிவியல் ஆய்விதழ் ஒன்றில் வெளியான கட்டுரையில் இந்த ஆய்வு குறித்த முடிவுகள் வெளி யாகி உள்ளது இதில் செடிகள் வெளியிடும் ஒலியின் அதிர்வெண் மிகவும் அதிகம் என்றும் மனிதச் செவியால் அதை உணரமுடியாது என்றும் கூறப்பட்டது. பூச்சிகளும் சிலவகை விலங்குகளும் மட்டுமே அந்தச் சத்தத்தைக் கேட்கமுடியும்.

ஆய்வில் தக்காளி, புகையிலை, கோதுமை, சோளம், கற்றாழை ஆகிய செடிகள் சோதிக்கப்பட்டன. சிலவற்றுக்குத் தண்ணீர் அளிக்கப் படவில்லை. சிலவற்றுக்குத் தண்டு அகற்றப்பட்டது. தேவைகள் இல்லா மல் இருந்த செடிகள் அவ்வளவாக ஒலி எழுப்பவில்லை என்றும் அதே நேரத்தில் நீர் மற்றும் இதர தேவை கள் கிடைக்காத தாவரங்கள் ஒலி எழுப்பிக்கொண்டே இருந்தன என் றும் கூறப்பட்டது. வெளியிடப்படும் ஒலி செடி வகைக்கு ஏற்றவாறு மாறியதாக ஆய்வாளர்கள் கூறினர்.

“உலகமே செடிகளின் சத்தத்தால் நிரம்பியிருக்கிறது. தண்ணீர்ப் பற்றாக்குறை, சேதம் ஆகியவை குறித்த தகவலைச் சத்தம் வழங்கு கிறது,” என்று இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் தாவர அறிவியல், உணவு பாதுகாப்புப் பள்ளியின் பேராசிரியர் லிலேக் ஹதானி(Lilach Hadany) கூறினார். இனிமேல்  வருங்காலத்தில் தாவரங் களோடும் மனிதர் உரையாடும் சூழல் ஏற்படும். இதன் மூலம் மனிதர்களின் வளர்ப்புப் பிராணிக ளோடு வளர்ப்பு தாவரங்களோடும் மனிதர்கள் பேச  வழி கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *