தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை, சரபோஜிநகர், தமிழ் பல்கலைக்கழக மேனாள் கண்காணிப்பாளர் மறைந்த க.இராமச்சந்திரன் அவர்களின் வாழ்விணையரும், தமிழ் பல்கலைக்கழக பணியாளர் இரா.வீரராகவன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியன் ஆகியோரின் தாயாருமான இரா.பாண்டி செல்வி (வயது 60) 07.04. 2026 அன்று மாலை 4 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கழகத் தோழர்கள் மறைந்த அம்மையாரின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். அம்மையாரின் இறுதி ஊர்வலம் இன்று (8.4.2026) காலை 11:30 மணி அளவில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை சரபோஜி நகரில் அமைந்துள்ள அம்மையாரின் இல்லத்தில் இருந்து புறப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்புக்கு: 8754365832, 9790258255
கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் அலைப்பேசி வழியாக தோழர் செந்தூர்பாண்டியனுக்கு ஆறுதல் கூறினர்.

