பிளாஸ்டிக் பைகளை டைல்ஸ் வில்லைகளாக மாற்றும் எகிப்திய நிறுவனம்

1 Min Read

எகிப்திலுள்ள ஒரு நிறுவனம் 5 பில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பைகளை சிமெண்டை விடத் திடமான டைல்ஸ்களாக மாற்ற இலக்கு வைத்துள்ளது. அதன் இலக்கு 2 தான். ஒன்று, மத்திய தரைக் கடலில்(Mediterranean Sea) டன் கணக்கில் கழிவுகள் சேர்வதைத் தடுப்பது. மற்றொன்று கட்டடத் துறையிலிருந்து அதிகள விலான கழிவுகள் வெளியேற்றப் படுவதைத் தடுப்பது என நிறுவனம் தெரிவித்தது. டெலிகிரீன் எனும் அந்த நிறுவனம் இதுவரை 5 மில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பைகளை மறுபயனீடு செய்துள்ளது. இது தொடக்கம்தான் என அதன் இணை நிறுவனர் கலீட் ராஃபத்  கூறியுள்ளார். 2025ஆம் ஆண்டுக்குள் 5 பில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பைகளை மறுபயனீடு செய்வது திட்டம் என் றார் அவர். பிளாஸ்டிக் பைகளை மறுபயனீடு செய்யும் நிறுவனத்தின் தொழிற்சாலை கைரோவின் புறந கரில் இருக்கின்றது.

பிளாஸ்டிக் பைகளிலிருந்து தயாரிக்கப்படும் டைல்ஸ்களை சொத்து, கட்டுமான நிறுவனங்க ளுக்கு விற்கப்படுகின்றன. அந்தக் கற்கள் வெளிப்புற நடைபாதைகள் அமைக்கப் பயன்படுகின்றன. ஆண்டுக்கு 74,000 டன் பிளாஸ்டிக் கழிவுகள் மத்திய தரைக் கடலில் சேர்வதாக 2020இல் வெளியிடப் பட்ட அறிக்கை கூறுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *