அந்நாள் – இந்நாள் (7.4.1979)

1 Min Read

திராவிடர் இயக்கத்தின் தீரர்களில் – தளபதிகளில் ஒருவர் தான் ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்கள். இவர் 24.9.1924இல் விருதுநகரில் பிறந்தார். இவர் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்க கருத்துகளால் கவரப்பட்டார்.

தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டர். அண்ணாவின் அருமைத் தம்பி. தி.மு.கழகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவர்.

பேச்சாளர், எழுத்தாளர், நகர்மன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் என பல பதவிகளை அலங்கரித்தவர்.

அந்தமான் தீவில் தி.மு.கழகத்தின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளச் சென்றவர்  தலையிலுள்ள குருதிக் குழாய் வெடித்து 7.4.1979 இரவு 8 மணியளவில் மறைந்து போனார்.

தந்தை பெரியாரின் கொள்கையில் அதிதீவிரம் காட்டியவர் என்பதால் வாலிபப் பெரியார் என்றே அழைக்கப்படலானார்.

வாழ்க! ஏ.வி.பி. ஆசைத்தம்பி!!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *