கருப்புச் சட்டைக்கு அனுமதி மறுப்பு

2 Min Read

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் அராநெல்லை, ஏப்.6- திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் கணிப் பொறி அறிவியல் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் நீல கிருஷ்ண பாபு. இவர் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இணைப் பேராசிரியராகப்  பணியாற்றி வரும்  முனைவர். ஜோசப் பீட்டர் அவர்களை ஆய்வு நெறியாளராகக் கொண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை செய்து வருகிறார்.

இந்நிலையில், இவரின் முனைவர் பட்ட பொது வாய்மொழித் தேர்வு தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெற்றது.  அந்நிகழ்வில் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், உறவினர்கள், நண்பர்கள்,  திருநெல்வேலி மற்றும்  தூத்துக்குடி மாவட்டத் திராவிடர் கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர். இதில் திருநெல் வேலி மாவட்டச் செயலாளர் இரா. வேல்முருகன், மாவட்டத்தலைவர் இரா. காசி, துணைத்தலைவர் இராசேந்திரன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் சந்திரசேகர், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பால் இராசேந்திரம், மாவட்டச் செயலாளர் முனியசாமி, மாவட்டத் துணைச்செயலாளர் ஆழ் வார், மாவட்ட இளைஞரணிச் செயலா ளர் செல்வராஜ், திராவிட மாணவர் கழக மாவட்டத் தலைவர் தெய்வப்ரியா, பெரியார் மய்யம் காப்பாளர் பொ.போஸ், வழக்குரைஞர். ந.செல்வம்,  ச.சக்திவேல், மாவட்ட அமைப்பாளர் கோ.முரு கன், தகவல் தொடர்பு பொறுப்பாளர் வழக்கு ரைஞர். இ.ஞா.திரவியம், கி.கோபால்சாமி ஆகியோர் கருப்புச் சட்டையுடன் அரங்கில் அமர்ந்திருந்தனர். அப்போது, அக்கல்லூரியில் பணியாற்றும் இரண்டு அலுவலர்கள் வந்து கருப்புச் சட்டையுடன் நிகழ்வில் பங்கேற்க அனுமதி கிடையாது என்றும் கல்லூரி நிர்வாகத்தின் வலியுறுத்தலின் பேரில் கல்லூரி முதல்வர் உங்களை  அரங்கிலிருந்து   வெளியேற்றுமாறு உத்தரவிட்டுள்ளார் எனவும் மிரட்டும் தொனியில் பேசியுள் ளனர். எனினும் அவை நாகரீகம் கருதி திராவிடர் கழகத் தோழர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியே றினர்.

“ஒரு கல்வி நிறுவனத்திற்குள் அதுவும் பொது வாய்மொழித் தேர்வில் கருப்புச்சட்டையுடன் கலந்து கொள்ளக் கூடாது என்று எந்த விதியும் இல்லாத நிலையில் இப்படி ஒரு காட்டுமிராண் டித்தனமான, அப்பட்டமான மனித உரிமை மீறலை  செய்திருக்கிற காமராஜ் கல்லூரி நிர்வாகத்தையும் அதன் முதல் வர் முனைவர் பூங்கொடியையும்  வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும் இது குறித்து மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக்கழக துணைவேந்தரும் ஆராய்ச்சி பிரிவின் இயக்குநரும் உரிய முறையில் விசாரித்து தூத்துக்குடி காம ராஜ் கல்லூரி நிர்வாகத்தின் மீதும் கல் லூரி முதல்வர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத் துள்ளனர்.ஜகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *