சென்னை, ஏப்.5- தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மதுரை திருப்பரங்குன்றம் பிரச்சினையை மய்யப்படுத்தி கந்தன் முருகன் வாக்கு என்ற காணொலி சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
பக்தர் ஒருவர் முருகனிடம் வேண்டுவது போலவும், அதற்கு அந்த கடவுள், பா.ஜனதா கட்சியின் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென்று கூறுவது போலவும் ஏ.அய். மூலம் தயாரிக்கப்பட்ட காணொலி அது.
மத உணர்வை தூண்டி வாக்கு சேகரிக்கும் இந்த நடவடிக்கை, தேர்தல் விதிகளுக்கும். சட்டத்திற்கும் விரோதமானது.
எனவே அந்தக் காணொலியை வெளியிட்டவர்கள் மீதும், பா.ஜனதா கட்சிதலைமை மீதும் தகுந்த நடவ டிக்கை எடுத்து அந்த காணொலியை வலை தளங்களில் இருந்து நீக்க வேண்டும்.
மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக அபிஷேக் தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மீது ஊழல் தடுப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. உத்தரபிரதேச அரசினால் இடைநீக்கம் செய்யப்பட்டு 18 மாதங்களுக்குப் பிறகு தமிழ்நாடு அரசுப் பணிக்கு அனுப்பப்பட்டார்.
தொடர் குற்றச்சாட்டுகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு ஆளான ஒருவரை மதுரைக்கு மாற்றியிருப்பதை ஏற்க முடியாது. தேர்தலில் நியாயமான, வெளிப்படையான பணிகள் அவரால் பாதிக்கப்படும். எனவே அவரது பணிமாற்ற உத்தரவை உடனே ரத்து செய்து லோகநாதனை பணியில் நீடிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பி.ஜே.பி.க்குக் கடவுளே ஓட்டுப் போடச் சொல்லும் காணொலி அப்ப சரி, இப்பவே முழு தோல்வியை பிஜேபி ஒப்புக்கொண்டுவிட்டது!
Leave a Comment

