ஆசிரியருக்குக் கடிதம்

இப்படியும் கண்ணுக்குத் தெரியாத பெரியார் பெருந் தொண்டர்கள்!

மதிப்பிற்குரிய அய்யா அவர்கட்கு வணக்கம் பல.

என்னை நான் அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்.

பெயர்: வீ. நடராசன், வயது 91 (6.4.1934).

பிறந்து வளர்ந்த ஊர்: திருமலை ராயன்பட்டினம், காரைக்கால் (புதுச்சேரி மாநிலம்)

படிப்பு: பி.ஏ. (தமிழ்)

கல்லூரி: குடந்தை அரசினர் கலைக் கல்லூரி (1953–1957).

ஜாதி: நான் பிறந்த ஜாதி – சைவ வேளாளர்.

குறிப்பு: இங்கு நான் ஜாதியைக் குறிப்பிடுவதன் காரணம் பொதுவாக உயர் ஜாதி என்று கருதப்படு பவர்கள் தந்தை பெரியாரைப் புரிந்து கொள்வதில்லை; பாராட்டுவதில்லை என்ற கருத்து பரவி உள்ளது.

உண்மை என்னவென்றால், பார்ப்பனர் அல்லாத தமிழர்கள், பிற மொழி பேசும் பார்ப்பனர் அல்லாத மக்கள், இவர்களின் இதயத்தில் பெரியார் நிரந்தரமாக வாழ்கிறார் என்பதுதான் உண்மை.

தந்தை பெரியாரைப் பற்றி நான் முதன்முதலில் தெரிந்து கொண்டது – 1947இல் ஏழாம் வகுப்பு படிக்கும் போது வகுப்புத் தோழர் ஒருவர் மூலம்!

அய்யாவை நேரில்பார்த்தது (1953–1954) – குடந்தை  Victoria Jublee Park. தந்தை பெரியாரின் சொற்பொழிவுகளைக் கேட்டது –   குடந்தை, தஞ்சை (ஜாதி ஒழிப்பு மகா நாடு) பல முறை நெய்வேலியில், மன்னை, திருமலை ராயன் பட்டினம் (சொந்த ஊர்), நாகை – முதலிய இடங்களில்.

நான் வேலை பார்த்தது – Neyveli Lignite Corporation (1960–1992) – எனக்கு நெய் வேலியில் வேலை கிடைத்ததற்கு காரணம்: நெய்வேலி 2–இல் அய்யா பேசிய பொதுக் கூட்டம்; ‘விடுதலை’யில் ‘இது நெய்வேலியா? பூணூல் வேலியா?’ என்று எழுதிய தலையங்கமும், கட்டுரையும்தான்.

அய்யாவின் முகத்தை கடைசியாக பார்த்தது 1973 டிசம்பர் 24 இரவு இராஜாஜி மன்றம்.

நான் இக்கடிதத்தை எழுதுவதின் நோக்கம் ‘நான் இறக்கும்போது ஒரு கருஞ்சட்டைத் தொண்டனாக – பெரியாரின் சீடனாக இறக்க வேண்டும் என்ற விருப்பத்தில் தான்.

விரைவில் பெரியார் திடல் வந்து கழக உறுப்பினராக பதிவு செய்து கொள்வேன்.

– வீ. நடராசன்

வண்டலூர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *